பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளை முழுமையான தடை செய்வது குறித்து Ontario மாகாண அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக Ontario கல்வி அமைச்சர் Paul Calandra தெரிவித்தார்.
கைத்தொலைபேசிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் Paul Calandra கூறினார்.
எமது பாடசாலைகளில் கைத்தொலைபேசி பயன்பாடு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாகி வருவதாக கருதுவதாக Paul Calandra செவ்வாய்கிழமை (28) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யும் முதல் மாகாணமாக தனது மாகாணம் திகழும் என Manitoba முதல்வர் Wab Kinew அண்மையில் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியானது.
