தேசியம்
செய்திகள்

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட COVID-19 நிதி உதவியில் 4.6 பில்லியன் டொலர்கள் தகுதியற்ற பெறுநர்களுக்குச் சென்றுள்ளது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

செவ்வாய்க்கிழமை (06) வெளியான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

மத்திய அரசு அவசரகால உதவி நிதி வழங்கலை திறம்பட கையாண்டதாக கணக்காய்வாளர் நாயகம் Karen Hogan தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனாலும் உதவி நிதி பெறுபவர்களின் தகுதி சரிபார்க்கப்படாத முடிவின் விளைவாக தகுதியற்ற நபர்களுக்கு 4.6 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

கனடிய அரசாங்கம் 211 பில்லியன் டொலர் COVID-19 உதவி தொகையை வழங்கியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது

இந்த பல பில்லியன் டொலர் பண இழப்புக்கு Liberal அரசாங்கம் பெறுப்பு என Conservative கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Related posts

Ontario: மாகாண சபைத் தேர்தலில் நான்காவது தமிழ் வேட்பாளர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனடாவுக்கு எதிரான அமெரிக்க அரசின் வரிகளை எதிர்க்கும் அமெரிக்க மேல் சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment