தமிழ் அகதி கோரிக்கையாளரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு கனடிய நீதிபதி இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த அகதி கோரிக்கையாளர் குகதீஸ்வரன் துரைசிங்கம் அடுத்த வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்தார்.
இலங்கை குடிமகனான இவர், கனடாவில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கு தடை விதிக்கக் கோரி மத்திய நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.
தான் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதையை எதிர்கொள்ள நேரிடும் ஆபத்து குறித்து ஒருபோதும் முறையான மதிப்பீடு செய்யப்படவில்லை என அவர் தனது தடை உத்தரவு விண்ணப்பத்தில் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை (02) நடைபெற்ற விசாரணையில் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மத்திய நீதிமன்ற நீதிபதி Sébastien Grammond, குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் நாடு கடத்தல் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
விண்ணப்பதாரி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதைக்கு உள்ளாகும் அபாயத்திற்கு ஆளாவார் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என நீதிபதி Sébastien Grammond செவ்வாய்க்கிழமை (07) வெளியான தனது முடிவில் குறிப்பிட்டார்.
இலங்கையில் சித்திரவதை பரவலாக உள்ள ஒரு சர்வாதிகார ஆட்சி இன்றும் நீடிப்பதாகவும், தமிழர்களுக்கு எதிரான பாகுபாடுகள் கணிசமான அளவில் தொடர்ந்து நிலவுவதாகவும் தனது முடிவில் நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.
முழுமையான கட்டுரை
தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்
தொடர்புபட்ட செய்திகள்
தமிழரின் நாடு கடத்தலில் தலையிட போவதில்லை: ஹரி ஆனந்தசங்கரி – தேசியம்
