மூன்று முக்கிய இடைத் தேர்தல்களில் முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான மூன்று இடைத் தேர்தல்களுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (03) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
Ontario மாகாணத்தின் Scarborough தென்மேற்கு, University-Rosedale, Quebec மாகாணத்தின் Terrebonne ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் Liberal அமைச்சர்கள் இருவர் பதவி விலகியதை தொடர்ந்து, Scarborough தென்மேற்கு, University-Rosedale தொகுதி வாக்காளர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் .
கனடாவின் உச்ச நீதிமன்றம் February மாதம் Terrebonne தேர்தல் முடிவை இரத்து செய்தது.
இந்த தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை (06) இரவு 9 மணி வரை முன்கூட்டிய வாக்குப்பதிவு தொடரவுள்ளது.
வெற்றிடமான இந்த மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தல்களை பிரதமர் Mark Carney அறிவித்திருந்தார்.
எதிர்வரும் 13-ஆம் திகதி இங்கு தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், Mark Carney தலைமையிலான Liberal கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளனர்.
Liberal கட்சி மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் 173 ஆசனங்களும், பெரும்பான்மையும் கிடைக்கும் நிலை உள்ளது.
Liberal கட்சி தற்போது நாடாளுமன்றத்தில் 169 இடங்களை கொண்டுள்ளனர்.
இது பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தேவையான 172 இடங்களில் மூன்று இடங்கள் குறைவாகவே உள்ளன.
Conservatives 141, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என நாடாளுமன்ற ஆசன பகிர்வு தற்போது அமைகிறது குறிப்பிடத்தக்கது.
