உக்ரைனுக்கான மேலும் $51 மில்லியன் உதவித் திட்டங்களை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
Liberal அரசாங்கம் வெள்ளிக்கிழமை (03) உக்ரைனுக்கான மேலும் $51 மில்லியன் உதவி, புனரமைப்பு நிதியை அறிவித்தது.
உணவு, தங்குமிடம் போன்ற மனிதாபிமான உதவிகள், ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடிய சமீபத்திய படைவீரர்களுக்கான ஆதரவுகள் உட்பட இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஒரு விரிவான நிதியிலிருந்து இந்தப் புதிய உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிதியில் $32 மில்லியன், செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையகம், உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட வெளி அமைப்புகள் மூலமான மனிதாபிமான உதவிகளுக்காக செலவிடப்படவுள்ளது.
முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் திட்டங்களுக்காக மேலும் $5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தேர்தல்களை நடத்துவதற்கும், அதன் செயல்முறை குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உக்ரைனுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில், மேலும் $6 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகிறது.
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில், ஐ.நா. பெண்கள் அமைப்புக்கான $5 மில்லியன் இந்த நிதியில் அ டங்குகிறது.
2022-ல் ரஷ்யா தனது படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு கனடிய மத்திய அரசாங்கம் $26 பில்லியன் வரை வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
