Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு பெறவுள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரி Michael Rousseau இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வு பெறுவார் என Air கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டின் இறுதிக்குள் அவர் ஓய்வு பெறுவார் என Air கனடா நிறுவனம் திங்கட்கிழமை (30) வெளியிட்டஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
French மொழியில் பேசமுடியாததற்காக இந்த மாத ஆரம்பத்தில் Michael Rousseau விமர்சனத்திற்கு உள்ளானார் .
New York LaGuardia விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் இரண்டு Air கனடா விமானிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, Michael Rousseau வெளியிட்ட காணொளி இரங்கல் செய்தியில் French மொழி இல்லாததtஹு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
குறிப்பிட்ட காணொளி இரங்கல் செய்தி செய்தியை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடும் முடிவை பிரதமர் Mark Carney உள்ளிட்ட பலரும் விமர்சித்திருந்தனர்.
துணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றிய பின்னர் Michael Rousseau 2021 February-யில் Air கனடாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது அடுத்த தலைமை நிர்வாகி பதவிக்கான வேட்பாளர்களை மதிப்பிடும்போது, French மொழி திறன் உட்பட பல அளவுகோல்களை தனது வாரியம் கருத்தில் கொள்ளும் என Air கனடா தெரிவித்துள்ளது.
