அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுகாதாரச் செலவுகளில் ஒரு தொகையை செலுத்த வேண்டிய நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
எதிர்வரும் May மாதம் முதல் இந்த நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால மத்திய சுகாதாரத் திட்டத்தின் (Interim Federal Health Program – IFHP) செயல்பாட்டை மத்திய அரசு மாற்றுகிறது.
இதனால் அகதிகளும், புகலிடக் கோரிக்கையாளர்களும் சில சுகாதார செலவுகளுக்கு ஒரு தொகை பணம் செலுத்த வேண்டிய நிலை தோன்றவுள்ளது.
அதிகரித்து வரும் பயன்பாடு, செலவுகளுக்கு மத்தியில் IFHP திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்ற உதவும் முயற்சியாக இந்த மாற்றம் உள்ளது என கூறப்படுகிறது.
2025 -ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தில் இந்த மாற்றம் முறை குறித்து முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2023-24 நிதியாண்டில், இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 520,000 தகுதியுள்ள பயனாளிகளுக்கு காப்பீட்டை வழங்கியது.
இதன் மொத்த செலவுகள் $590 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.
இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
