கனடிய பசுமைக் கட்சி புதிய தலைமைக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
November மாதம் பசுமைக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
புதிய தலைமை பதவிக்கு இருவர் போட்டியிடுகின்றனர்.
Nira Dookeran, Mike Morrice ஆகியோர் தலைமை பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
2021 முதல் 2025 வரை Mike Morrice கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக Kitchener Centre தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் Conservative வேட்பாளர் Kelly DeRidder-இடம் தோல்வியடைந்தார்.
அவர் முன்னர் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
அவருக்கு எதிராக போட்டியிடும் Nira Dookeran, பசுமைக் கட்சியின் நீண்டகால அடிமட்டப் பிரச்சாரகரும் ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.
அவர் ஆறு முறை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார்.
2006-இல் தலைமைப் பொறுப்பை ஏற்று, பின்னர் 2011-இல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட காலத் தலைவரான Elizabeth May-க்கு மாற்றாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அவர் 2019 வரை கட்சியின் தலைவராக பணியாற்றினார்.
2020-இல் Elizabeth May-க்கு பதிலாக Annamie Paul கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய தேர்தலுக்குப் பின்னர் தலைமைத்துவம் குறித்த மறு ஆய்வைத் தொடர்ந்து அவரும் பதவி விலகினார்.
அடுத்த ஆண்டு Jonathan Pedneault-டுடன் இணைந்து Elizabeth May, கட்சித் தலைமையை மீண்டும் கைப்பற்றினார்.
இடைத் தேர்தலில் வெல்லத் தவறியதை அடுத்து Jonathan Pedneault தலைமை பதவியில் இருந்து பதவி விலகினார்.
ஆனால், 2025 பொதுத் தேர்தலில் Jonathan Pedneault மீண்டும் போட்டியிட்டு, Elizabeth May-உடன் இணைந்து இணைத் தலைவராக பிரச்சாரம் செய்தார்.
இந்தத் தேர்தலில் Elizabeth May மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அவருடன் இணைந்து கட்சியை வழி நடத்திய Jonathan Pedneault தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதன் எதிரொலியாக தேர்தலின் பின்னர் Jonathan Pedneault தனது பதவியில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய தேர்தலுக்குப் பின்னர் தான் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் Elizabeth May அறிவித்தார்.
அடுத்த தேர்தலில் கட்சியை வழிநடத்த போவதில்லை என கட்சி உறுப்பினர்களுக்கு எழுதிய மின்னஞ்சலில் அவர் அறிவித்தார்.
தனக்கு மாற்றான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சித் தலைவராகவும் தொடர்ந்து நீடிப்பதாக அந்த மின்னஞ்சலில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தலைமை பதவிக்கு இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Nira Dookeran, Mike Morrice ஆகியோர் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் நிதி திரட்டவும் தயாராகி வருகின்றனர்.
September மாத இறுதிக்குள், அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 50 இளைஞர்கள் உட்பட குறைந்தது 200 புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும்,
தவிரவும் குறைந்தது $15,000 நிதியையம் அவர்கள் திரட்ட வேண்டும்.
பசுமைக் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய விரும்பும் கனடியர்கள், October 14-ஆம் திகதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக வேண்டும்.
November 2 முதல் 13 வரை விருப்ப வரிசை ranked ballo முறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,
பசுமைக் கட்சியின் புதிய வெற்றியாளர் November 14 அன்று அறிவிக்கப்படுவார் என கட்சியின் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
