தேசியம்
செய்திகள்

நெடுந்தெரு 401 விபத்தில் சிக்கிய 50 வாகனங்கள்?

நெடுந்தெரு 401-இல் 50 வாகனங்கள் வரை மோதிய விபத்து ஒன்று நிகழ்ந்தது.

கிழக்கு Ontario-வில் உள்ள நெடுஞ்சாலை 401-இல் செவ்வாய்க்கிழமை (27) 50 வாகனங்கள் மோதியதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

Quinte West, Napanee இடையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கிழக்கு Ontario-வில் திங்கட்கிழமை 100-க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நிகழ்ந்த ஒரு நாளின் பின்னர் இந்த விபத்துகள் நிகழ்ந்ததாக OPP தெரிவித்துள்ளது.

இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த விபத்து நிகழ்ந்த நெடுஞ்சாலையில் பனி மூடிய பாதைகள் உள்ளதாக போக்குவரத்து அமைச்சு (MTO) தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின்போது குறிப்பிட்ட பகுதியில் பனிப்புயல் எச்சரிக்கை அமுலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

 

 

Related posts

அரசியலில் இருந்து விலகும் அனிதா ஆனந்த்!

Lankathas Pathmanathan

B.C. அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan

Leave a Comment