18 ஆயிரம் பொதுத்துறை ஊழியர்கள் பணி நீக்க அறிவித்தலை பெற்றுள்ளனர்.
30 மத்திய துறைகளை இந்த பணி நீக்க அறிவிப்புகள் பாதிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் இந்தப் பணி நீக்க அறிவிப்பு வழங்கப்பட்டதாக பொதுத்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் விரிவான செலவின மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 18 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில் கடந்த இரண்டு வாரங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி நீக்க அறிவிப்புகள் உள்ளடங்குவதாகவும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
LJI Reporter ரம்யா சேது
