தேசியம்
செய்திகள்

வெளியாகிறது அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பு!

கனடாவை தலைமையகமாக கொண்ட  அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பு (Constitution) இந்த மாதம் வெளியாகிறது.

January 24-ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழாவில் இந்த யாப்பு முறையாக வெளியாகிறது.

இந்த யாப்பு ஒரு ஆவணம் மட்டுமல்ல என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

உலகத் தமிழர்களின் ஒற்றுமையின் உறுதியாகவும், நீதி, ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகிய மதிப்புகளின் எழுத்துப்பூர்வ உறுதி மொழியாகவும் இந்த யாப்பு அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே பொங்கல் பண்பாட்டின் நோக்கம் என தனது பொங்கல் செய்தியில்  நிமால் விநாயகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவரின்
பொங்கல் செய்தி ….

LJI Reporter ரம்யா சேது

Related posts

மேலும் 31 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேற்றம்

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

இந்த ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள கனடியர்கள் விரும்பவில்லை: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment