Via புகையிரதம் பயணிகளுடன் தடம் புரண்ட சம்பவம் Quebec மாகாணத்தில் நிகழ்ந்தது.
திங்கட்கிழமை (12) அதிகாலை, பயணிகளுடன் சென்ற புகையிரதம் இரண்டு வாகனங்களுடன் மோதி தடம் புரண்டது.
அதிகாலை 1:30 மணியளவில் நான்கு பேர் தூங்கிக் கொண்டிருந்த வாகனங்களுடன் புகையிரதம் மோதியதாகவும், இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வாகனங்கள் புகையிரத தண்டவாளங்களுக்கு மிக அருகில் நிறுத்தப்பட்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிகின்றன.
இந்தப் புகையிரதத்தில் பயணித்த 124 பயணிகளும் பேருந்தின் மூலம் தமது பயணத்தை தொடர்ந்தனர்.
புகையிரதத்தின் முதல் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் குறித்து போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
LJI Reporter ரம்யா சேது
