தேசியம்
செய்திகள்

கனடியத் தமிழர் பேரவையின் புதிய பணிப்பாளர் சபை அறிவிப்பு

கனடியத் தமிழர் பேரவை – CTC – புதிய பணிப்பாளர் சபையை அறிவித்துள்ளது.

புதிய தலைவர், பணிப்பாளர் சபை நியமனத்தை CTC அறிவித்துள்ளது.

இந்த நியமனம் தமிழ் சமூகத்தின் நலன்களுக்கான பணியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது என CTC  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

CTCயின் புதிய தலைவராக குமார் ரட்னம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

CTCயின் புதிய பணிப்பாளர் சபை:

குமார் ரட்னம்  – தலைவர்

வைத்தியர் ஷான் ஏ. சண்முகவடிவேல் – உப தலைவர்

பிரகல் திரு – செயலாளர்

டில்ஷான் நவரத்னராஜா – பொருளாளர்

இயக்குநர்கள் குழு

நாதன் வீரசிங்கம்

சகீலா சங்கர்

ரவி பொன்னம்பலம்

தமிழ் கனடிய சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக இந்த ஆண்டு தொடர்ச்சியான பொது ஆலோசனைகளை இந்த பணிப்பாளர் சபை ஆரம்பிக்கும் என CTC வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Venezuela: அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

Lankathas Pathmanathan

Markham நகர விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment