தேசியம்
செய்திகள்

கனடியத் தமிழர் பேரவையின் புதிய பணிப்பாளர் சபை அறிவிப்பு

கனடியத் தமிழர் பேரவை – CTC – புதிய பணிப்பாளர் சபையை அறிவித்துள்ளது.

புதிய தலைவர், பணிப்பாளர் சபை நியமனத்தை CTC அறிவித்துள்ளது.

இந்த நியமனம் தமிழ் சமூகத்தின் நலன்களுக்கான பணியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது என CTC  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

CTCயின் புதிய தலைவராக குமார் ரட்னம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

CTCயின் புதிய பணிப்பாளர் சபை:

குமார் ரட்னம்  – தலைவர்

வைத்தியர் ஷான் ஏ. சண்முகவடிவேல் – உப தலைவர்

பிரகல் திரு – செயலாளர்

டில்ஷான் நவரத்னராஜா – பொருளாளர்

இயக்குநர்கள் குழு

நாதன் வீரசிங்கம்

சகீலா சங்கர்

ரவி பொன்னம்பலம்

தமிழ் கனடிய சமூகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக இந்த ஆண்டு தொடர்ச்சியான பொது ஆலோசனைகளை இந்த பணிப்பாளர் சபை ஆரம்பிக்கும் என CTC வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனடாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் அமெரிக்காவில் கைது

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

Gaya Raja

Leave a Comment