2023-ஆம் ஆண்டு Toronto Pearson சர்வதேச விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் நிகழ்ந்த தங்கக் கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த 43 வயதான சந்தேக நபர் திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
கைதானவர் Arsalan Chaudhary என காவல்துறையினர் தெரிவித்தனர்.
April 17, 2023 அன்று நடந்த இந்தத் திருட்டு தொடர்பாக பத்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Air Canada வளாகத்தில் இருந்து சுமார் $20 மில்லியன் மதிப்புள்ள 6,600 தூய தங்கக் கட்டிகள், சுமார் $2.5 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வெளிநாட்டு பணம் திருடப்பட்டது.
விமானத்தில் வந்த இந்த தங்கம், பணம் திருட்டு குறித்த இரகசிய, கூட்டு விசாரணை “Project 24K” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய இன்னும் முயற்சிப்பதாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் 33 வயதான Simran Preet Panesar, தமிழரான 36 வயதான பிரசாத் பரமலிங்கம் ஆகியோர் அடங்குகின்றனர்.
August 19, 2024 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், பிரசாத் பரமலிங்கத்திற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கருதப்படுகிறது.
LJI Reporter ரம்யா சேது
