ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதலில் எந்த கனடியரும் பாதிக்கப்படவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் Sydney Bondi Beach துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் 12 வயது குழந்தை ஒன்றும் அடங்குகிறது.
இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 38 பேர் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகள் அடங்குவதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற Hanukkah கொண்டாட்டத்தில் இரண்டு துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவத்தை ஒரு யூத எதிர்ப்பு பயங்கரவாதச் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வர்ணித்தார்.
இரண்டு துப்பாக்கிதாரிகள் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் தெரிவிப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இதில் எந்த கனடிய குடிமக்களும் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்து தெரியவில்லை என கூறிய வெளிவிவகார அமைச்சு, பாதிக்கப்பட்ட எந்த ஒரு கனடியருக்கும் உதவ தூதரக அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் மேலும் தகவல்களைச் சேகரிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வன்முறையை கனடிய பிரதமர் Mark Carney கண்டித்துள்ளார்.
“பயங்கரவாதம், வன்முறை, வெறுப்பு, மிரட்டலுக்கு அடிபணிய கூடாது என்ற உறுதியுடன், கனடா ஆஸ்திரேலிய மக்களுடனும், யூத மக்களுடனும் துணை நிற்கிறது” என சமூக ஊடகங்களில் Mark Carney பதிவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் உட்பட ஏனைய கனடிய தலைவர்கள் பலரும் இந்த வன்முறையை கண்டித்தனர்.
Ontario முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வர் Olivia Chow, Mississauga நகர முதல்வர் Carolyn Parrish, Brampton நகர முதல்வர் Patrick Brown, Vaughan நகர முதல்வர் Steven Del Duca உள்ளிட்டோர் இந்த வன்முறையை கண்டித்தனர்.
கனடாவின் யூத சமூக உறுப்பினர்கள் இந்தத் தாக்குதல் குறித்து கோபத்தை வெளிப்படுத்தினர்.
கனடாவின் தேசிய யூத குழுக்களும் இந்தத் தாக்குதலை கண்டித்தன.
இந்தத் தாக்குதலை அடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு தடுப்பு நடவடிக்கையாக எதிர்வரும் நாட்களில் யூத நிறுவனங்கள், பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw கூறினார்.
ஆஸ்திரேலிய வன்முறை உள்ளூரில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் York பிராந்திய காவல்துறை, பிராந்தியம் முழுவதும் காவல்துறையினரின் பிரசங்கம் அதிகரித்துவரும் என ஒரு சமூக எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் அதிகரித்த காவல்துறை பிரசன்னத்தை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என Peel பிராந்திய காவல்துறையினர் கூறினர்.
Hanukkah கொண்டாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கையை அதிகரித்து வருவதாக Montreal காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தவிரவும் திட்டமிடப்படி Hanukkah கொண்டாட்டங்கள் தொடரும் என Toronto, Montreal, Vancouver நகர யூத ஆலயங்கள் கூறின.
