மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் உணர்த்தி நிற்கிறது என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் தெரிவித்தார்.
2025 மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இம்முறை மாவீரர் நாளில் தமிழர் தேசம் என்றுமில்லாத வகையில் பேரெழுச்சியுடன் காணப்படுகின்றமை மாவீரர் பெற்றோர்களையும் உருத்துடையோரையும் பெருமிதம் கொள்ள வைக்கும் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழ் மக்கள் எமது கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வலிமை மிகுந்த நாளாக இது அமைகின்றது எனவும் நிமால் விநாயகமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் முழுமையான மாவீரர் நாள் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது:
LJI Reporter ரம்யா சேது
