கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் தென் கொரியாவில் சந்தித்தனர்.
இந்த வாரம் ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் தென் கொரியாவில் சந்திக்கின்றனர்.
தனது துணைவியாருடன் புதன்கிழமை (29) தென் கொரியா சென்றடைந்த பிரதமர் Mark Carney-க்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர் தென் கொரிய ஜனாதிபதி Lee Jae-Myung வழங்கிய இரவு விருந்தில் பிரதமர் Mark Carney-யும் ஜனாதிபதி Donald Trump-பும் சந்தித்தனர் .
தென் கொரிய ஜனாதிபதி வழங்கிய இரவு உணவிற்கு அழைக்கப்பட்ட உலகத் தலைவர்களின் ஒரு சிறிய குழுவில் இவர்கள் இருவரும் அடங்கினர்.
இரவு உணவிற்கு அமர்ந்திருந்த பிரதமரும் ஜனாதிபதியும் ஒருவரையொருவர் நோக்கி கையசைத்து புன்னகைத்தனர்.
ஆனாலும் இவர்கள் இருவரும் நேரடியாக சந்திக்கவோ – உரையாடவோ இல்லை.
கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை Donald Trump திடீரென முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் இருநாட்டு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த உச்சி மாநாட்டில் கனடிய பிரதமரை தனியே சந்திக்க திட்டமிடவில்லை என Donald Trump பலமுறை கூறியுள்ளார்.
இருவரும் பல நாட்களாக ஆசியாவில் தங்கியுள்ளனர்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க உச்சி மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனாலும் அண்மைய வர்த்தக பிளவு ஆரம்பித்ததிலிருந்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவோ அல்லது ஒருவருடன் ஒருவர் பேசவோ இல்லை என தெரியவருகிறது.
