Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் இருவரும் தோல்வியடைந்தனர்.
திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் Nimisha Patel வெற்றி பெற்று நகரசபை உறுப்பினரானார்.
Markham நகர தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் படி இந்தத் தேர்தலில் Nimisha Patel 2,954 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதில் தமிழ் வேட்பாளர் கிள்ளி செல்லையா 2,098, ஆரணி முருகானந்தன் 2,055 வாக்குகளை பெற்றுள்ளனர்.
இந்த இடைத் தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர்.
Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
