பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கனடாவின் முடிவை “அவமானத்தின் அடையாளம்” என இஸ்ரேலிய பிரதமர் விமர்சித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் வெள்ளிக்கிழமை (26) ஆற்றிய உரையின் போது இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கனடிய பிரதமர் Mark Carney கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த அங்கீகாரத்தின் மூலம் “யூதர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை” ஊக்குவிப்பதாக கனடா மீது இஸ்ரேலிய பிரதமர் குற்றம் சாட்டினார்.
விமர்சகர்கள், போராட்டக்காரர்களால் சூழப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அவரது உரை நிகழ்ந்தது.
“உங்கள் அவமானகரமான முடிவு யூதர்களுக்கு எதிராகவும், அனைத்து இடங்களிலும் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்” என Benjamin Netanyahu தனது உரையில் குறிப்பிட்டார்.
பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மண்டபத்திலிருந்து பெருமளவில் வெளிநடப்பு செய்த பின்னர் அவரது உரையி நிகழ்ந்தது.
