அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீதான நம்பிக்கையை பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பதவி விலக வேண்டும் அல்லது பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்துகிறது.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மேற்பார்வையிடும் மத்திய அரசின் துப்பாக்கிகளை மீளப் பெறும் திட்டத்தை அவர் கேள்வி எழுப்பும் ஒலிப்பதிவு வெளியான நிலையில் இந்தப் பதவி விலகல் கோரிக்கை வலுப்பெறுகிறது.
அமைச்சருக்கும் அவரது Toronto குடியிருப்பில் வசிக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான உரையாடலின் 20 நிமிட ஒலிப்பதிவை Toronto Star பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை (21) வெளியிட்டது.
இந்த ஒலிப்பதிவில் குறிப்பிட்ட திட்டத்தை அமுல்படுத்த உள்ளூர் காவல்துறைக்கு வளங்கள் இருக்குமா என்பது குறித்து அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.
ஆனால் அமைச்சர் தானாக பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கைகளை ஹரி ஆனந்தசங்கரி நிராகரித்துள்ளார்.
“அமைச்சர் (ஹரி ஆனந்தசங்கரி) மீது நம்பிக்கை உள்ளது” எனக் கூறிய பிரதமர் Mark Carney அவரது பணிகளை பாராட்டினார்.
செவ்வாய்க்கிழமை (23) New York நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், துப்பாக்கிகளை மீளப்பெறும் திட்டத்தின் மூலம் தனது அரசாங்கம் பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது எனக் கூறினார்.
