இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என கனடிய தமிழர் பேரவை (CTC) வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்துக்கு CTC கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இந்த விடயம் குறித்து CTC அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60-ஆவது கூட்டத் தொடரிலும், வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் 29-ஆவது கூட்டத் தொடரிலும் கனடிய அரசாங்கம் முன்னணிப் பங்காற்ற வேண்டும் என CTC வெளியிட்ட அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு, இந்த அமர்வுகள் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கின்றன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நீதி, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றில் கனடா தனது உலகளாவிய தலைமையை மீண்டும் உறுதிப்படுத்த இது ஒரு தருணம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
CTC வெளியிட்ட முழுமையான அறிக்கை ……….

