தேசியம்
செய்திகள்

கபவாதத்திற்காக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

கபவாதத்திற்காக (Pneumonia) அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கனடியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

கனடிய சுகாதார நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது.

கடந்த இலையுதிர்காலத்தில் கபவாதத்திற்கான அவசர சிகிச்சைப் பிரிவு வருகைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது என கனடிய சுகாதார நிறுவனத்தின் தகவல் தெரிவித்துள்ளது.

ஐந்து முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என வியாழக்கிழமை (11) வெளியிடப்பட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

COVID தொற்றுக்கு பின்னர் கபவாதத்திற்கான அவசர சிகிச்சைப் பிரிவு வருகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

2023-24 -ஆம் ஆண்டில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்வதற்கான முதல் 10 காரணங்கள் பட்டியலில் கபவாதம் இடம்பெறவில்லை.

ஆனால் 2024-25 ஆம் ஆண்டில் அது 3-ஆவது இடத்திற்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு!

Gaya Raja

கனடாவில் இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படலாம்

Gaya Raja

தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறுவோம்: பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment