தேசியம்
செய்திகள்

உக்ரைனின் எதிர்காலம் குறித்த முடிவுகளை உக்ரைனியர்களே எடுக்க வேண்டும்: கனடிய பிரதமர்

உக்ரைனின் எதிர்காலம் குறித்த முடிவுகளை உக்ரைனியர்களே எடுக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் Mark Carney, உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy ஆகியோர் திங்கட்கிழமை (11)  தொலைபேசியில் உரையாடினர்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த எந்தவொரு விவாதத்திலும் உக்ரைன் ஒரு தரப்பாக இருக்க வேண்டும் என்ற உடன்பாட்டை இரு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சர்வதேச எல்லைகளை கட்டாயமாக மாற்ற முடியாது என கனடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் நட்பு நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், எந்த ஒரு சமாதான ஒப்பந்தத்திலும் “வலுவான, நம்பகமான” பாதுகாப்பு உத்தரவாதம் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Related posts

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

Lankathas Pathmanathan

இடைத் தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்த அரசாங்கம்

Lankathas Pathmanathan

“போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதி கனடிய அமைச்சரிடம் கையளிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment