தேசியம்
செய்திகள்

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

திருடப்பட்ட 53  வாகனங்களை Montreal துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Quebec மாகாண காவல்துறை, சிறப்புக் குழுக்கள் Montreal துறைமுகத்தில் இருந்து 53 திருடப்பட்ட வாகனங்களைக் கைப்பற்றியுள்ளன.

துறைமுகத்தில் 26 கொள்கலன்கள் சோதனையிடப்பட்ட நிலையில் இந்த வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருடப்பட்ட வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தமை தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து போராட உதவுவதற்காக 28 மில்லியன் டொலர் பண உதவியை கடந்த வாரம் கனடிய  மத்திய அரசு உறுதியளித்தது.

Related posts

அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்தும் கனடிய மாகாணங்கள்?

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி அறிமுகம்: Theresa Tam

Gaya Raja

புதிய ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் 28-ஆம் திகதி

Lankathas Pathmanathan

Leave a Comment