பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு உடன்படவில்லை என்றால், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதா, இல்லையா என்பதை கனடிய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுவரையிலும் இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
இது குறித்து விவாதிக்க கனடிய அமைச்சரவை புதன்கிழமை (30) கூடவுள்ளது.
காசாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதத்தை “சர்வதேச சட்ட மீறல்” என பிரதமர் Mark Carney கடந்த வாரம் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
