தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களில் மாற்றம்?

Conservative கட்சியின் அடுத்த தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களை மறு சீரமைப்பது குறித்து கட்சி ஆராந்து வருகிறது.

மகாராணியின் மரணம் Conservative கட்சி அடுத்த தலைவரை எப்படி அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்பதை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது.

சனிக்கிழமை (10) Ottawaவில் ஒரு நிகழ்வின் மூலம் கட்சி தனது புதிய தலைவரை அறிவிக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால் மகாராணியின் மரணம் காரணமாக கனடாவில் பல நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில் மகாராணியின் மரணம் தொடர்பான நெறிமுறைகளை கட்சி மதிக்கும் என கட்சியின் தலைமை தேர்தல் அமைப்புக் குழுவின் தலைவர் ஒரு அறிக்கையில் வியாழக்கிழமை (08) தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் கட்சியின் புதிய நிலைப்பாடு வெள்ளிக்கிழமை (09) நாளை மாலை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

புதிய நாடாளுமன்ற நிதிநிலை அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

மேலும் நகர சபைகளுக்கு வலுவான நகர முதல்வர் அதிகாரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment