Quebec மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போன மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இவர்களின் உடல்களை ஒரு ஏரியில் புதன்கிழமை (25) இரவு மாகாண காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
Quebec-கின் வடக்கு கடற்கரையில் மருத்துவ போக்குவரத்து உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் காணாமல் போனதாக தேடப்பட்ட மூவர் சடலமாக மீட்கப்பட்டனர்.
காவல்துறையின் நீருக்கடியில் தேடுதல் மேற்கொள்ளும் பிரிவினர் அவர்களின் உடல்களை ஒரு ஏரியில் கண்டெடுத்தனர்.
மாகாண காவல்துறையினர் காணாமல் போன தமது இரண்டு பணியாளர்களின் உடல்களையும், ஒரு நோயாளியின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளதாக Airmedic நிறுவனம் கூறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (20) உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான போது, தமது குழுவினர் மருத்துவ போக்குவரத்தை மேற்கொண்டிருந்தனர் என Airmedic தெரிவித்தது.
இதில் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மீட்பு குழுவினர் சம்பவ தினத்தன்று ஒருவரை மீட்டெடுத்தனர்.
இந்த விபத்து குறித்து கனடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
