தேசியம்
செய்திகள்

F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய கனடா முடிவு

கனடிய விமானப்படையின் உபயோகத்திற்காக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (09) இதனை உறுதிப்படுத்தினார்.

Royal கனேடிய விமானப்படையின் CF-18 விமானங்களுக்கு பதிலாக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

இந்த கொள்வனவுக்கு அமெரிக்க F-35 தயாரிப்பாளருடன் கனடா ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்.

16, F-35 விமானங்களின் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர் நிதி உதவியை தேசிய பாதுகாப்புத் துறை பெற்றதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

மேலும் 72 F-35 ரக விமானங்கள் அடுத்த ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் கனடாவின் எதிர்ப்பு விமானங்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆக அதிகரிக்க உள்ளது.

88 விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கான செலவை சுமார் 19 பில்லியன் டொலர் என அமைச்சர் அனிதா ஆனந்த் நிர்ணயித்தார்.

Related posts

Paralympic போட்டிகளின் முதல் நாளில் கனடாவுக்கு மூன்று பதக்கங்கள்

Lankathas Pathmanathan

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

Quebec வெடிப்பு சம்பவ இடத்தில் மூன்று உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment