அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க (U.S. Immigration and Customs Enforcement – ICE) காவலில் இருந்த கனடியர் மரணமடைந்தார்.
மரணமடைந்தவர் 49 வயதான Johnny Noviello என அடையாளம் காணப்பட்டார்.
இவர் கடந்த திங்கட்கிழமை (23) மரணமடைந்தார் என Miami தீயணைப்பு மீட்பு துறையினரால் அறிவிக்கப்பட்டார் .
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் காவலில் இருந்தபோது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இவர் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார் என ICE செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
இவர் January 2, 1988-ஆம் ஆண்டு கனடாவில் இருந்து அமெரிக்க சென்றதாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நிரந்தர குடியிருப்பாளரானார் எனவும் ICE தெரிவித்தது.
May 15, 2025 அன்று, அமெரிக்க போதைப்பொருள் சட்டங்களை மீறியதற்காக அவர் ஒரு நன்னடத்தை அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
October 2023-இல், அவர் மோசடி, போதைப்பொருள் கடத்தலுக்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 12 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.
