ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டிற்காக பிரதமர் Mark Carney Brussels பயணமானார்.
பிரதமர் ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை திங்கட்கிழமை (23) சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு முன்னதான 348 கனடிய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள Antwerp Schoonselhof இராணுவ கல்லறைக்கு அவர் பயணம் செய்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார்.
Belgian பிரதமர் Bart De Wever, கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், தேசிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவிற்கான சிறப்பு தூதர் Stephane Dion, கனடிய பிரதமரின் துணைவியார் Diana Fox Carney ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் “கூட்டாண்மையின் ஒரு புதிய சகாப்தத்தை” ஆரம்பிப்பதற்காக Brussels பயணமாவதாக Mark Carney ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.
“Atlantic-கின் இருபுறமும்” உள்ள தொழிலாளர்கள், வணிகங்களின் பாதுகாப்புக்கு இந்த கூட்டாண்மை அவசியமானது என அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டில், வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், பாதுகாப்பு அமைச்சர் David McGuinty ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NATO உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக Mark Carney செவ்வாய்க்கிழமை நெதர்லாந்து பயணமாகிறார்.
