Saskatchewan மாகாணத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் வடக்கில் பல பகுதிகளை காட்டுத்தீ தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் அவசர கால நிலையை முதல்வர் Scott Moe அறிவித்தார்.
காட்டுத் தீயை கட்டுப்படுத்தவும், தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் இந்த அவசரகால நிலை அனுமதிக்கும் என முதல்வர் கூறினார்.
இந்த அவசரகால நிலை 30 நாட்கள் நீடிக்கும் எனவும், இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை (29) பிற்பகல் நிலவரப்படி, மாகாணத்தில் 17 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் எட்டு கட்டுப்படுத்தப்படாத நிலையில் உள்ளதாக கருதப்படுகிறது.
இன்றைய நிலையில் Saskatchewan மாகாணம் மதிய அரசாங்கத்திடம் இராணுவ உதவியை கோரவில்லை.
புதன்கிழமை (28) தனது அவசரகால நிலையை அறிவித்த போது இராணுவ உதவியை Manitoba மாகாணம் கோரியது குறிப்பிடத்தக்கது.
