தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் இலங்கையில் வீதி விபத்தில் மரணம்!

கனடிய தமிழர் ஒருவர் இலங்கையில் நிகழ்ந்த வீதி விபத்தில் காலமானார்.
புங்குடுதீவைச் சேர்ந்த கந்தையா பாலச்சந்திரன் என்பவரே வீதி விபத்தில் காலமானார்.
இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.
புங்குடுதீவு  2 ஆம் வட்டாரத்தைச் சொந்த இடமாக கொண்ட இவர் தனது ஊர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் வாகனத்தில் கொழும்பு திரும்பும் வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இவரது பூதவுடல் இறுதி நிகழ்வுகளுக்காக  கனடாவுக்கு எடுத்து வரப்படவுள்ளது.

Related posts

Ottawa தொகுதியில் போட்டியிடும் பிரதமர்

Lankathas Pathmanathan

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும்  விடுதலை! 

Gaya Raja

தெற்கு Ottawaவை தாக்கிய சூறாவளி!

Lankathas Pathmanathan

Leave a Comment