Filipino வீதி திருவிழாவில் நிகழ்ந்த தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்.
Vancouver நகரில் நிகழ்ந்த Filipino வீதி திருவிழாவில் ஒருவர் பங்கேற்பாளர்களை SUV வாகனத்தால் மோதியதில் ஒன்பது பேர் பலியாகினர்.
இதில் பலர் காயமடைந்த நிலையில், குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் வரை உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படாது என காவல்துறை கூறுகிறது.
சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என உறுதியாக நம்புவதாக Vancouver காவல்துறையினர் தெரிவித்தனர்.
