September 8, 2026
தேசியம்
செய்திகள்

Ontario பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது?

Ontarioவில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொராக்கோவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் November மாத ஆரம்பத்தில் Ontario முழுவதும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கலாம் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வார ஆரம்பத்தில் பெல்ஜியத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மொராக்கோவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த நிலையில், சந்தேகநபர் Ontarioவில் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளவில்லை.

Related posts

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

Lankathas Pathmanathan

கனடாவுக்கு எதிரான அமெரிக்க அரசின் வரிகளை எதிர்க்கும் அமெரிக்க மேல் சபை உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan

Scarborough: தமிழ் இளைஞனின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment