Quebec மாகாணத்தின் சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான Montreal வாசிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
1995-ஆம் ஆண்டின் பிரிவினை வாக்கெடுப்பின் 30-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது.
Montreal நகரின் மையப்பகுதி வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
Quebec சொந்த நாடாக மாறுவதை காணும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான Montreal வாசிகள் சனிக்கிழமை (25) அணிவகுத்துச் சென்றனர்.
நாளுக்கு நாள் அதிகமான இளைஞர்கள் இந்த பிரிவினை இயக்கத்தில் ஈடுபடுவதை காண முடிவதாக இந்த பேரணியை ஏற்பாடு செய்த OUI Québec தலைவர் தெரிவித்தார்.
Quebec பிரிவினைக்கான இரண்டு வாக்கெடுப்புகள் தோல்வியடைந்த நிலையில், 2030-ஆம் ஆண்டுக்குள் பிரிவினைக்கான மூன்றாவது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என Parti Québécois நம்பிக்கையில் உள்ளது.
