தேசியம்
செய்திகள்

Nagorno-Karabakhக்கு கனடா $2.5 மில்லியன் மனிதாபிமான உதவி

Nagorno-Karabakh மனிதாபிமான நெருக்கடிக்கு 2.5 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு கனடா 2.5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது,

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த நிதியுதவியை அறிவித்தது.

சுகாதார சேவைகள், உணவு போன்ற அவசர உதவிகளை வழங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நிதி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Azerbaijanனின் இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து 120,000 மக்கள் தொகை கொண்ட Nagorno-Karabakh மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை அண்டை நாடான  Armeniaவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

Nagorno-Karabakh பிராந்தியத்தில் மனித உரிமைகளை மதிக்கப்படுவதை கனடா தொடர்ந்து வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly  கூறினார்.

இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கனடா இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Related posts

புதிய புற்றுநோய் கண்டறிதல் 2020இல் சரிவு

Lankathas Pathmanathan

கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Lankathas Pathmanathan

P2P போராட்டத்திற்கு கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு குரல்

Lankathas Pathmanathan

Leave a Comment