தேசியம்
செய்திகள்

லிபியாவிற்கு $5 மில்லியன் மனிதாபிமான உதவியை அறிவித்த கனடா

லிபியாவிற்கு 5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடிய மத்திய அரசு வழங்குகிறது.

கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட லிபியாவிற்கு கனடா 5 மில்லியன் டொலர் உதவி வழங்குகிறது.

கனடாவின் சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Ahmed Hussen வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் இந்த நிதியுதவி அறிவித்தார்.

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அமைச்சர் Ahmed Hussen கவலை தெரிவித்தார்.

லிபியாவில் இரண்டு அணைகள் உடைந்ததில் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

கனடிய செஞ்சிலுவைச் சங்கம் (Canadian Red Cross) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி சேகரிப்பு முன்னெடுக்கின்றன.

Related posts

Blue Jays அணி World Series தொடருக்கு முன்னேறியது

Lankathas Pathmanathan

Paris Paralympics: முதலாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment