February 16, 2025
தேசியம்
செய்திகள்

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகள் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் கூறினார்

திங்கட்கிழமை இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை ஒரு மிகவும் தீவிரமான விடயம் என குறிப்பிட்டார்

கடந்த சில வாரங்களாக, கனேடிய பாதுகாப்பு அமைப்புகள் , இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும் கனேடிய குடிமகன் Hardeep Singh Nijjar  கொல்லப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரித்து வருவதாக தனது உரையில் Justin Trudeau கூறினார்.

Related posts

கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

Markham நகரில் வாகனம் மோதியத்தில் தமிழர் ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment