தேசியம்
செய்திகள்

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

தொடரும் கனேடிய காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் Charles கவலை தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கி தவிக்கும் கனேடிய சமூகங்களுக்கு மன்னர் Charles செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இங்கிலாந்து மன்னரின் செய்தி ஆளுநர் நாயகத்தின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Northwest பிரதேசங்கள், British Columbia மாகாணம் ஆகிய இடங்களில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்ட நிலையில்  இங்கிலாந்து மன்னரின் இந்த செய்தி வெளியிடப்பட்டது.

காட்டுத்தீ காரணமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை குறித்து தானும் தனது மனைவியும் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக புதன்கிழமை (23) வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

Related posts

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment