தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள் வியாழக்கிழமை (27) புறப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்த விமானங்களில் மொத்தம் 118 பேர் பயணித்துள்ளனர்.

இவர்களில் கனடியர்கள் தவிர, நட்பு நாடுகளின் குடிமக்களும் அடங்குகின்றனர்.

அடுத்த சில நாட்களில் மேலதிகமான விமானங்களில் கனடியர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அந்த பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

180க்கும் மேற்பட்ட கனேடியர்கள் இதுவரை சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கனடியர்களை வெளியேற்றும் முயற்சிகளில் 200 கனடிய இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சூடானில் 1,800 கனேடியர்கள் உள்ளதாக புதன்கிழமை (26) மாலை வரை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 700 பேர் வரை நாட்டை விட்டு வெளியேற கனடிய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளனர்.

Related posts

கனடிய மத்திய வங்கி $522 மில்லியன் இழந்தது

Lankathas Pathmanathan

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

வரவு செலவு திட்ட முன்னுரிமைகள்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment