வேலை நிறுத்தத்தை தாமதப்படுத்துவதற்கான தொழிற்சங்கத்தின் முன்மொழிவை கனடா Post நிராகரித்தது.
55,000 அஞ்சல் ஊழியர்கள் வார இறுதிக்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை தோன்றியுள்ளது.
இந்த நிலையில் கனடா Post முன்வைத்த சமீபத்திய முன்மொழிவை பரிசீலிக்க இரண்டு வார கால அவகாசத்தை தொழிற்சங்கம் கோரியுள்ளது.
இதன் மூலம் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட வேலை நிறுத்த நடவடிக்கைக்கு முன்னதாக, தொழிற்சங்கத்தை அதன் சமீபத்திய சலுகையை ஏற்றுக்கொள்ள கனடா Post தூண்டுகிறது.
ஆறு மாதங்களில் இரண்டாவது வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, கனடா Post தொழிற்சங்கத்திற்கு ஒரு புதிய முன்மொழிவை வழங்கியுள்ளது.
