தேசியம்
செய்திகள்

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் காரணமாக மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

Saskatchewan மாகாணத்தின் தெற்கு பகுதிகள், Manitoba, Ontario மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (20) ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (21) முழுவதும், Saskatchewanனில் பனி பொழிவு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது Saskatchewan சுற்றுச்சூழல் கனடாவின் பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

Manitobaவின் சில பகுதிகள் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை பனி பொழிவை எதிர்கொள்கின்றன.

பனி பொழிவு எச்சரிக்கை காரணமாக வியாழனன்று Manitoba மாகாணம் முழுவதும் பல பாடசாலைகள் மூடப்பட்டன.

வடமேற்கு Ontarioவில் வியாழன் மதியம் ஆரம்பமான பனிப்பொழிவு வெள்ளி இரவு வரை தொடரும் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontarioவில் வெள்ளி காலை கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது

வெள்ளி இரவுக்குள் 25 சென்டி மீட்டர் வரை பனி பொழிவு Ontarioவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளது

Lankathas Pathmanathan

Saskatchewanனில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள்?

Lankathas Pathmanathan

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan

Leave a Comment