தேசியம்
செய்திகள்

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் காரணமாக மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

Saskatchewan மாகாணத்தின் தெற்கு பகுதிகள், Manitoba, Ontario மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (20) ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (21) முழுவதும், Saskatchewanனில் பனி பொழிவு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது Saskatchewan சுற்றுச்சூழல் கனடாவின் பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

Manitobaவின் சில பகுதிகள் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை பனி பொழிவை எதிர்கொள்கின்றன.

பனி பொழிவு எச்சரிக்கை காரணமாக வியாழனன்று Manitoba மாகாணம் முழுவதும் பல பாடசாலைகள் மூடப்பட்டன.

வடமேற்கு Ontarioவில் வியாழன் மதியம் ஆரம்பமான பனிப்பொழிவு வெள்ளி இரவு வரை தொடரும் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontarioவில் வெள்ளி காலை கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது

வெள்ளி இரவுக்குள் 25 சென்டி மீட்டர் வரை பனி பொழிவு Ontarioவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

Lankathas Pathmanathan

234 கனேடியர்கள் ஞாயிறு காசாவை விட்டு வெளியேறினர்

Lankathas Pathmanathan

மூன்றில் ஒரு கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment