தேசியம்
செய்திகள்

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியது?

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தொற்று குறித்த தவறான தகவல்கள் குறைந்தது 300 மில்லியன் டொலர் மருத்துவமனை, ICU செலவுகளுக்கு பங்களித்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

The Council of Canadian Academies இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தவறான தகவல்களால் மக்கள் COVID தொற்று உண்மையானதல்ல என நம்பி, தடுப்பூசியை பெற மறுத்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.

COVID மிகைப்படுத்தப்பட்டதாக நம்பி, 2021ஆம் ஆண்டின் March மாதம் முதல் November மாதங்களுக்கு இடையில் 2.35 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெறுவதை தாமதப்படுத்தியதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Related posts

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: முரளி கிருஷ்ணன்

Gaya Raja

காசாவில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment