February 12, 2025
தேசியம்
செய்திகள்

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

கனடாவின் பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை நெருக்கடி குறித்து கவலை எழுப்பப்படுகிறது.

Edmonton, Toronto, Winnipeg போன்ற நகரங்களில் பொதுப் போக்குவரத்து பயணிகள் மீதான வன்முறை தாக்குதல்களின் சமீபத்திய அதிகரிப்பு, பொது போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Torontoவில் கடந்த சில நாட்களில் மாத்திரம் ஐந்து வெவ்வேறு வன்முறை சம்பவங்கள் பொதுப் போக்குவரத்தில் நிகழ்ந்துள்ளன.

இந்த வன்முறைகளை தொடர்ந்து TTCஇல் தமது கண்காணிப்பை அதிகரிக்க Toronto காவல்துறை முடிவு செய்துள்ளது.

Toronto நகர முதல்வர் John Tory, TTC தலைமை நிர்வாக அதிகாரி Rick Leary ஆகியோருடன் இணைந்து Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw வியாழக்கிழமை (26) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

தினமும் 80க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் TTC தளங்களில் பணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் Edmonton பொது போக்குவரத்தில் 35 வன்முறை நிகழ்வுகள், ஒன்பது ஆயுதங்கள் தொடர்பான சம்பவங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec தயார்!

Gaya Raja

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

Lankathas Pathmanathan

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Lankathas Pathmanathan

Leave a Comment