November 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

கனடிய தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் CSIS தெரிவித்தது.

2019, 2021 பொதுத் தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் கனடிய தேர்தலில் தலையிடும் நோக்கத்தைக் கொண்டிருந்தது எனவும் இதற்காக இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனவும்  CSIS கூறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்,கனடாவில் உள்ள பாகிஸ்தான் அரச அதிகாரிகள் கனடிய அரசியலில் இரகசியமாக செல்வாக்கு செலுத்த முயன்றனர் எனவும் CSIS தெரிவித்தது.

கனடாவில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக CSIS கூறுகிறது.

இந்த குற்றச் சாட்டுகள் கனடிய தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பான விசாரணையின்  ஒரு பகுதியாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ளன.

2019, 2021 பொதுத் தேர்தல்களில் சீனா, இந்தியா, ரஷ்யா உட்பட்ட நாடுகளின் தலையீடு குறித்து இந்த பொது விசாரணை ஆராய்கிறது.

Related posts

போலந்தில் ரஷ்யாவின் ஊடுருவல் பொறுப்பற்றது: Mark Carney

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

ஆரம்பமாகும் Ontario மாகாணசட்டமன்றஅமர்வுகள் : ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை!

thesiyam

Leave a Comment