September 19, 2026
தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

ஜெருசலேம் இரட்டை குண்டுவெடிப்பில் கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெருசலேமில் பேருந்து தரிப்பிடங்களுக்கு அருகே புதன்கிழமை (23) காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் ஒரு கனேடிய-இஸ்ரேலிய இளைஞன் பலியானதுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

பலியானவர் 15 வயதான Aryeh Schupak என அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஒரு கனடிய குடிமகன் என இஸ்ரேலுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலில் கனடிய இளைஞன் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைவதாக இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Related posts

கட்சி எதிர்காலத்தைப் பாதுகாக்க பதவியில் இருந்து விலகினேன்: François Legault

Lankathas Pathmanathan

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Bramptonனில் தமிழர் சமூகத்துக்கு நினைவுச் சின்னம் – தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment