தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

ஜெருசலேம் இரட்டை குண்டுவெடிப்பில் கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெருசலேமில் பேருந்து தரிப்பிடங்களுக்கு அருகே புதன்கிழமை (23) காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் ஒரு கனேடிய-இஸ்ரேலிய இளைஞன் பலியானதுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

பலியானவர் 15 வயதான Aryeh Schupak என அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஒரு கனடிய குடிமகன் என இஸ்ரேலுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலில் கனடிய இளைஞன் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைவதாக இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Related posts

நெடுஞ்சாலை 401 விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan

Ontarioவில் அறிவிக்கப்பட்ட மீளத் திறக்கும் மூன்று படி திட்டம்!

Gaya Raja

Leave a Comment