தேசியம்
செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் Quebec சட்டமன்ற உறுப்பினர் குற்றவாளி

முன்னாள் Quebec தேசிய சட்டமன்ற உறுப்பினர் Harold LeBel பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக கண்டறியப்பட்டார்.

முன்னாள் Parti Québécois சட்டமன்ற உறுப்பினரான இவர், பாலியல் வன்கொடுமைக்கு குற்றவாளி என நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

ஒன்பது பெண்கள், மூன்று ஆண்கள் அடங்கிய நடுவர் குழு இரண்டு நாட்கள் ஆலோசனையின் பின்னர் LeBel குற்றவாளி என கண்டறிந்தனர்.

வெளியீட்டுத் தடையின் கீழ் உள்ள ஒரு பெண், 2017இல் LeBel தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

LeBel 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் Quebec சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.

Related posts

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

Gaya Raja

GO புகையிரதத்தின் கூரையில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

Lankathas Pathmanathan

Leave a Comment