தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த சில கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்

Ottawaவின் முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த தனது சில கருத்துக்களுக்கு இப்போது வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.

முற்றுகை போராட்டத்தின் உறுப்பினர்களை “சிறிய சிறுபான்மை மக்கள்” (small fringe minority of people) என விமர்சித்ததற்கு வருந்துவதாக Justin Trudeau வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.

Trudeauவின் இந்த விமர்சனம் எதிர்ப்பாளர்களை உற்சாகப்படுத்தியதுடன் அரசாங்க அதிகாரிகளிடம் அவர்களை மேலும் எரிச்சலூட்டியது என விசாரணை ஆணையர் விமர்சித்தார்.

பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத் தலைவர்களால் போராட்டங்களின் போது அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.

Related posts

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment