தேசியம்
செய்திகள்

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை, உள்நாட்டு அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த கருத்தை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை மதிக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த கடினமான காலங்களில் இலங்கைதீவின் மக்களுடன் கனடா ஆதரவாக உள்ளது என அமைச்சர் Joly கூறினார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் எச்சரித்திருந்தது.

இலங்கைக்கான பயண ஆலோசனை ஒன்றை கனடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts

Quebec முதியோர் இல்ல கட்டுமான விபத்தில் 5 பேர் காயம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment