தேசியம்
செய்திகள்

Manitoba மோசமான பனிப்புயலை எதிர்கொள்கிறது

Manitoba பெரும் பனிப்புயல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்தது.

Winnipeg உட்பட தெற்கு Manitobaவின் பல பகுதிகளுக்கு குளிர்கால புயல் கண்காணிப்பை வானிலை நிறுவனம் திங்கட்கிழமை (11) வெளியிட்டது.

தெற்கு Manitobaவில் பல தசாப்தங்களில் மிக மோசமானதாகதொரு பனி புயல் இந்த வாரம் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த பனிப்புயல் தெற்கு Manitoba, தென்கிழக்கு Saskatchewan பகுதியை இந்த வாரத்தின் நடுப்பகுதியில் தாக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

புதன்கிழமை ஆரம்பமாகும் இந்த பனி புயல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடரும் என கூறப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை காலைக்குள் 30 முதல் 80 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படும் என சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது.

Related posts

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை வரவேற்கும் CTC!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Lankathas Pathmanathan

Leave a Comment